இலங்கைக்கு வருகின்றார் பிரிட்டன் துணைப் பிரதமர்.!
பிரிட்டன் துணைப் பிரதமர் டேவிட் லாமி குறுகிய கால விஜயம் மேற்கொண்டு நாளைமறுதினம் 17 ஆம் திகதி இலங்கைக்கு வருகின்றார்.
17 ஆம் திகதி காலை கொழும்பு வரும் டேவிட் லாமி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் தங்கியிருக்கும் போது பிரிட்டன் துணைப் பிரதமர், தமிழ் அரசியல் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.
பிரிட்டன் துணைப் பிரதமரைச் சந்திப்பதற்குத் தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஐ.நா. பணியகத்தில் நடைபெறும் நிகழ்வில் குழந்தைகள் பராமரிப்புக்கான உலகளாவிய பரப்புரைக்கான சாசனம் குறித்த உடன்பாட்டிலும் டேவிட் லாமி கையெழுத்திடுவார்.
தனது குறுகிய கால விஜயத்தை நிறைவு செய்த பின்னர், டேவிட் லாமி 17 ஆம் திகதி மாலையே இலங்கையில் இருந்து புறப்படவுள்ளார்.