கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!
கம்பஹா மாவட்டம், பியகமை பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் வயோதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் பியகமை பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
நேற்று இரவு பியகம பகுதியில் வீதியின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த வயோதிபர் மீது, பின்னால் வந்த டிப்பர் ரக வாகனம் ஒன்று மோதியுள்ளது.
அதிவேகமாக வந்த டிப்பர் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மோதியதே இந்த விபத்துக்குக் காரணம் எனப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதியைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து பியகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், கைது செய்யப்பட்ட சாரதியை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.