உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

தோற்றவர்களின் தேர்தல் கோஷங்களுக்கு பணியமாட்டோம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
25 பார்வைகள்

மாகாண சபைத் தேர்தலைக் கண்டு தாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை எனவும், உரிய முறைப்படி அவை நடத்தப்படும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன விடுத்த சவாலுக்கு பதிலடி கொடுத்து கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“அரசின் மீதான மக்கள் செல்வாக்கை அளவிடுவதற்கு மாகாண சபைத் தேர்தல் ஒன்றும் அவசியமில்லை. கடந்த பொதுத்தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களில் மக்கள் வழங்கிய தெளிவான ஆணையின் அடிப்படையிலேயே இந்த அரசு இயங்கி வருகின்றது. லக்ஷ்மன் யாப்பா போன்றோர் இழந்த அரசியல் செல்வாக்கை மீட்டெடுக்கவே இத்தகைய சவால்களை விடுகின்றனர்.

மாகாண சபைத் தேர்தல் முறைமைகளில் உள்ள சிக்கல்களைத் தீர்த்து, முறையான ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்தவே நாம் திட்டமிட்டுள்ளோம். இதில் எவ்வித அரசியல் காலதாமதமும் இல்லை.

கடந்த கால ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து அரசு எடுத்து வரும் கடும் நடவடிக்கைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே எதிர்க்கட்சியினர் தற்போது தேர்தல் கோஷத்தை எழுப்புகின்றனர்.

எமது முதன்மை நோக்கம் நாட்டைப் பொருளாதார ரீதியாகவும், ஊழலற்ற நிர்வாக ரீதியாகவும் கட்டியெழுப்புவதாகும். அதற்குத் தடையாக இருக்கும் எவ்வித அழுத்தங்களுக்கும் அரசு பணியாது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

57 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

88 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

37 0 0