வவுனியா பிறப்பு, இறப்பு சான்றிதழ் பிரிவு மூன்று மாதங்களில் சீரமைப்பு – சத்தியலிங்கம் எம்.பி தலையீடு.!
வவுனியா பிரதேச செயலகத்தில் உள்ள பிறப்பு, இறப்பு சான்றிதழ் விநியோக பிரிவில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் தாமதங்கள் குறித்து இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் நேற்றைய வவுனியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பிரதேச செயலாளர், தற்போது 2–3 மட்டுமே உள்ள கவுண்டர்களை அடுத்த மூன்று மாதங்களில் 6–8 ஆக அதிகரித்து, பிரிவை முழுமையாக சீரமைப்பதாகவும், அதன் பிறகு குறித்த பிரிவில் எந்த தாமதங்களும் இடம்பெறாது எனவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.