O/L பரீட்சை முன் அடையாள அட்டை விபரக் கடிதம் பெறாதவர்களுக்கு விசேட ஏற்பாடு.!
எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களில் இதுவரை தேசிய அடையாள அட்டை விபர உறுதிப்படுத்தல் கடிதங்களைப் பெறாதவர்களுக்காக ஆட்பதிவுத் திணைக்களம் விசேட அறிவிப்பு வெளியிட்டுள்ளது.ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.drp.gov.lk வழியாக குறித்த விபர உறுதிப்படுத்தல் கடிதங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவசர தேவையுள்ள பரீட்சார்த்திகளுக்காக இன்று மாத்திரம் ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள மாகாண அலுவலகங்கள் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை திறந்து வைக்கப்படுகின்றன.
இம்முறை பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் இதுவரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காதவர்களாக இருந்தால், அதிபர் அல்லது கிராம நிர்வாக அதிகாரியால் சான்றளிக்கப்பட்ட முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் தேவையான ஆவணங்களுடன் நேரில் வருகை தருமாறு ஆட்பதிவுத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.