புத்தளம் உடப்பு ஆறாம் வட்டாரப் பகுதியில் கடலரிப்பு.!
புத்தளம் மாவட்டத்தின் உடப்பு 6ம் வட்டாரப்பகுதி கடலோரம் இன்று பாரிய கடலரிப்பை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்தப்பகுதியில் சுமார் 25 மீன் வாடிகள் காணப்படுகின்றன. இதில் பல வாடிகள் கடலரிப்பு காரணமாக கடலில் ஆக்கிரமித்து செல்வதைக் காணலாம்.கடலோரத்தில் வசித்து வந்த ஒருவரின் வீட்டில் உள்ள மலசல கூடம் சற்று முன்பு உடைந்துள்ளதாகவும், வாடிகள் உடைந்து கடலில் சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நோக்கம் வேளைகளில் கடல் மிகவேகமாக ஊடறுத்து பாதையை கடக்கக்கூடும் என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாப் பைசல் இன்று நிலைமையை நேரில் பார்வையிட்டார்.மக்கள், கடலரிப்பை தடுப்பதற்கு அரசாங்கம் விரைவில் கற்கள் போட்டு உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.