உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மருதமுனை – பெரியநீலாவணையில் டெங்கு கட்டுப்பாட்டிற்கு விசேட புகைமூட்டல் நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மருதமுனை மற்றும் பெரியநீலாவணை பகுதிகளில் டெங்கு நுளம்புப் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று விசேட புகைமூட்டல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இப்பகுதிகளில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு மற்றும் துப்புரவு பணிகளின் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்ட நடவடிக்கையாக இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரில், கல்முனை மாநகர சபையின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் திருமதி எஸ். எப். சாரா சராப்டீன் தலைமையில் நடைபெற்ற களப்பணியில், டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயம் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட இடங்கள் இலக்கு வைக்கப்பட்டன.

குறிப்பாக குடியிருப்பு வீடுகள், பாடசாலை வளாகங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், மதஸ்தாபனங்கள் மற்றும் பொது இடங்களில் புகைமூட்டல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு கள உதவியாளர்கள் இணைந்து மேற்கொண்ட இந்நடவடிக்கை, நுளம்புப் பெருக்கத்தை கட்டுப்படுத்தி பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சிறப்பாக நிறைவேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

57 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

88 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

37 0 0