உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பண்டாரவளை கல்குவாரியில் மண்சரிவு: இரண்டு தொழிலாளர்கள் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

பதுளை மாவட்டத்தின் பண்டாரவளைப் பகுதியில் அமைந்துள்ள கல்குவாரி ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.பண்டாரவளை – பூனாகலை வீதியின் 16 மற்றும் 17 ஆம் கிலோமீற்றர் கம்பங்களுக்கு இடைப்பட்ட ‘லியங்கஹவல, மாபிடிய’ பகுதியில் இயங்கிவரும் கல்குவாரியிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.


இன்று காலை குவாரியில் பாறைத் துளைப்பு பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, திடீரென மேல்பகுதியிலிருந்து மண் மற்றும் கற்கள் சரிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் இரண்டு தொழிலாளர்கள் மண் மற்றும் பெரும் பாறைகளின் கீழ் புதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் அவசரமாக சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர். கனரக இயந்திரங்களின் உதவியுடன் சடலங்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

57 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

88 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

37 0 0