உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

வயல்வெளி பாதுகாப்புக்கு அணைக்கட்டு அவசியம் – நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
34 பார்வைகள்

வவுனியா – ஓமந்தை கமநல சேவை நிலையப் பிரிவிற்குட்பட்ட பெரியவிளாத்திக்குளம் கமக்கார அமைப்பின் கீழ் காணப்படும் புல்மோட்டை வயல்வெளிக்கான அணைக்கட்டு அமைப்பதுடன், நீர்ப்பாசன வாய்க்காலைச் சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.


13.02.2026 அன்று நடைபெற்ற வவுனியா பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.பெரியவிளாத்திக்குளம் கமக்கார அமைப்பினரால் தமக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ரவிகரன், விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு குறித்த அணைக்கட்டு மற்றும் நீர்ப்பாசன வாய்க்காலை அமைப்பது அவசரத் தேவையாக உள்ளதாக தெரிவித்தார்.


இதற்கிடையில், இவ்விடயம் தொடர்பாக தமக்கு நேரடியாக எவ்வித கோரிக்கையும் கிடைக்கவில்லை என வவுனியா பிரதேச செயலாளர் தெரிவித்தார். அதேவேளை, அணைக்கட்டு மற்றும் வாய்க்கால் அமைப்பதற்கான தேவை இருப்பதை ஒப்புக்கொண்ட ஓமந்தை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமக்கார அமைப்பினரால் தமக்கு உத்தியோகபூர்வ கோரிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என குறிப்பிட்டார்.இதற்கு பதிலளித்த ரவிகரன், கமக்கார அமைப்பு தமக்குக் கோரிக்கை முன்வைத்துள்ளதால் உரிய திட்டங்களின் கீழ் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.


அதனைத் தொடர்ந்து, உரிய திட்டங்களின் மூலம் குறித்த அணைக்கட்டு மற்றும் நீர்ப்பாசன வாய்க்காலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வவுனியா பிரதேச செயலாளர் மற்றும் ஓமந்தை கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

57 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

88 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

37 0 0