உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

நுவரெலியா அரச பேருந்து நிலைய உள் வீதி சேதம்: அவசர சீரமைப்பு கோரிக்கை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
38 பார்வைகள்

மத்திய மலைநாட்டின் பிரதான நகரமான நுவரெலியாவில் அமைந்துள்ள அரச பேருந்து நிலையத்தின் உள் சுற்றுவட்ட வீதி கடும் குன்றுகளும் குழிகளும் நிறைந்த நிலையில் காணப்படுகிறது.கடந்த பல ஆண்டுகளாக இவ்வீதி முறையாகச் சீரமைக்கப்படாததால், பேருந்து பழுது பார்க்கும் நிலையத்திற்கு செல்லும் பாதை பயன்பாட்டுக்கு ஒவ்வாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, நிலைய உத்தியோகத்தர்கள் உள்ளே சென்று வருவதிலும் சிரமம் நிலவுகிறது.மேலும், பழுது பார்க்க கொண்டு வரப்படும் பேருந்துகளை நிலையத்தின் உள் பகுதியிற்குள் செலுத்துவதும் மிகுந்த சிரமத்துடன் மேற்கொள்ளப்படுவதாக சாரதிகள் குற்றம்சாட்டுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் உடனடி கவனம் செலுத்தி, பேருந்து பழுது பார்க்கும் நிலையத்தின் சுற்றுவட்ட வீதியை செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

57 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

88 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

37 0 0