உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சிறப்பாக இடம்பெற்ற யா/பொற்பதி றோ.க.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

யாழ். வடமராட்சி கிழக்கு பொற்பதி றோ.க.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்று பிற்பகல் 1:30 மணியளவில் பாடசாலை மைதானத்தில் பாடசாலை அதிபர் திரு.சிவராசா குகதாசன் தலைமையில் இடம்பெற்றது.

இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கபட்டத்தை தொடர்ந்து மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான ரஜீபன் அவர்கள் கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினராக திரு செ.சிறிராமசந்திரன் மருதங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர் அவர்களும் மற்றும் அருட்தந்தை ஜோன் குரூஸ் மணற்காட்டு பங்கு தந்தை அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதுடன் கௌரவ விருந்தினராக திரு.சிவசம்பு தர்மரத்தினம் அவர்களும் கலந்து கொண்டனர்.

பாடசாலை மட்ட விளையாட்டுகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசிகள், சான்றிதழ்களையும், கருந்துரைகளையும், நிகழ்வின் விருந்தினராக கலந்துகொண்டவர்கள் வழங்கினார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

56 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

97 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

87 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

36 0 0