உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

வாக்குறுதிகள் காற்றில்; அடக்குமுறை ஆட்சியில்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
25 பார்வைகள்

தேசிய மக்கள் சக்தி அரசு, ஆட்சிக்கு வரும்போது வழங்கிய வாக்குறுதிகளுக்கு முரணாகச் செயற்படுவதோடு, மக்களின் ஜனநாயக ரீதியான போராட்டங்களை அடக்குமுறை மூலம் ஒடுக்கி வருகின்றது என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஜானக வக்கும்புர குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“மக்கள் தமது கோரிக்கைகளை வென்றெடுக்க வீதியில் இறங்கிப் போராடத் தேவையில்லை எனக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசு, இன்று மக்களை ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக வந்து போராடும் நிலைக்குத் தள்ளிவிட்டது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் தற்போதைய அரசின் சர்வாதிகாரப் போக்கினால் முடக்கப்படுகின்றன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், போராட்டங்களை முன்னெடுப்பதற்கெனத் தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அன்று போராட்டக்காரர்கள் பல மாதங்களாக அங்கேயே தங்கியிருந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்த அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இன்று மழையில் நனையும் போராட்டக்காரர்களுக்குக் கூடத் தங்குவதற்கு இடமளிக்கப் பொலிஸார் மறுப்பது அரசின் மனிதாபிமானமற்ற போக்கையே காட்டுகின்றது.” – என்றார்.

எதிர்க்கட்சியினர் மீது வீண் பழிகளை சுமத்தித் தப்பிக்க முயல வேண்டாம் என அரசுக்கு அறிவுறுத்திய அவர், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற முன்வருமாறும் கேட்டுக்கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

45 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

86 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

78 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0