உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மட்டக்களப்பில் பெரிய அளவிலான கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை – மூன்று சந்தேகர்கள் கைது.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
23 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், பரப்பளவில் செயல்பட்டு வந்த ஒரு கசிப்பு உற்பத்தி நிலையம் இன்று (10) காலை முற்றுகையிடப்பட்டது.மாவிலங்கத்துறை களப்பை அண்டிய வாவியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 லட்சம் மில்லி லீற்றர் கோடா மற்றும் 50,000 மில்லி லீற்றர் கசிப்புடன் மூன்று சந்தேக நபர்கள், மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.


இச்சோதனை நேற்று மாலை 6 மணி முதல் இன்று அதிகாலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட்டது. விசாரணைத் தகவலின் அடிப்படையில், ஆரையம்பதி மற்றும் மாவிலங்கத்துறை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.கைதானவர்களிடமிருந்து கோடா பரல்கள், கசிப்பு வடிப்பதற்கான கலன்கள் மீட்கப்பட்டு, போதைப் பொருட்களுடன் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.காத்தான்குடி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

45 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

86 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

77 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0