மன்னாரில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் விசேட அபிவிருத்திக் குழு கூட்டம் -பல்வேறு விடையங்கள் குறித்து ஆராய்வு!
மன்னார் மாவட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் உள்ளூராட்சி அபிவிருத்தி விசேட ஒருங்கிணைப்பு குழு இன்று (10) மாலை அமைச்சர் பிமல் ரத்நாயக்கா தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.கூட்டத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்கள் காதர் மஸ்தான், சத்தியலிங்கம், ரவிகரன், ஜெகதீஸ்வரன், திலகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துரையாடலில் பங்கு பெற்றனர்.
கூட்டத்தில் மன்னார், நானாட்டான், மாந்தை மேற்கு, முசலி உள்ளிட்ட ஐந்து உள்ளூராட்சி பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி வேலைகள், வீதிகள் புனர்நிர்மாணம், போக்குவரத்து மற்றும் சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் ஆராயப்பட்டன.சிறப்பாக, முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இளவன் குளம் ஊடாக புத்தளத்திற்கு செல்லும் பிரதான வீதியை திறந்து மக்களின் பயன்பாட்டிற்கு விடுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
முன்னெடுக்கப்பட்ட ஆலோசனைகள் குறைந்தது ஒரு மாதத்திற்கு ஒருமுறை தொடர்ந்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் தொடரப்படவுள்ளதாகவும், அரசியல் மற்றும் நிர்வாக தலைவர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



