உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

17 வயது சிறுவன் பொலிஸார் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு – உயர் மட்ட விசாரணை ஆரம்பம்..!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
23 பார்வைகள்

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் இன்று அதிகாலை பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 17 வயது சிறுவன் அல்பினோ அருள் பயாஸ் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உயர்மட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளார்.


ஊர்காவற்றுறை வீதியில் உள்ள அல்லைப்பிட்டி சந்தியில் கடமையில் இருந்த பொலிஸார், சந்தேகத்துக்கிடமான ஹயஸ் ரக வாகனத்தை நிறுத்தும் கட்டளையிட்டதாகவும், வாகனம் கட்டளையை மீறியதாலேயே துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, “வாகனத்தை நோக்கி நேரடியாக துப்பாக்கிச்சூடு முன்னெடுக்குவதற்கு முன்பு வானத்தை நோக்கி பலமுறை எச்சரிக்கை வேட்டுக்கள் வழங்கப்பட்டன. அந்த எச்சரிக்கையையும் மீறியதால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது” என விளக்கியுள்ளார்.


சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாரும், யாழ் மாவட்டக் குற்ற விசாரணைப் பிரிவும் இணைந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.மரணமடைந்த சிறுவனின் பெற்றோர், “குடும்பக் கஷ்டத்தால் சிறு வயதிலேயே வேலைக்குச் சென்றார். சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத போதிலும் வாகனம் ஓட்டுவதை தொழிலாகக் கொண்டிருந்தார். இன்று அதிகாலை ஆட்களை வேலைக்கு ஏற்றுவதற்காகச் சென்றபோது இந்த அநியாயம் நிகழ்ந்தது” என கூறியுள்ளனர்.இந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

45 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

86 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

77 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0