கடமைகளை பொறுப்பேற்றனர் பெண் நடத்துனர்கள்.!
இலங்கை போக்குவரத்து சபையில் அண்மையில் பெண் நடத்துனர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.இந்நிலையில் குறித்த பெண் நடத்துனர்கள் கொட்டாவை, மாகும்புர பன்முக போக்குவரத்து மையத்திலிருந்து இன்றுமுதல் உத்தியோகப்பூர்வமாக தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
போக்குவரத்து துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கும் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தவும் வரலாற்றில் முதன் முறையாக இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.