உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

ஐக்கிய மக்கள் சக்திக்குள் அதிரடி மறுசீரமைப்பு; இளையோருக்கு பதவி வழங்குமாறு யோசனை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
18 பார்வைகள்

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றுக்கிடையிலான கூட்டணி குறித்த பேச்சுகள் நேர்மறையான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது தேர்தல் காலம் இல்லை என்பதால், இந்தப் பேச்சுகளை நிதானமாகவும் ஆழமாகவும் முன்னெடுத்துச் செல்ல இரு தரப்பும் உடன்பட்டுள்ளன.

இந்த அரசியல் நகர்வின் முக்கிய கட்டமாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு விரைவில் நடைபெறவுள்ளது.

இரு கட்சிகளின் செயற்குழு உறுப்பினர்களையும் உள்ளடக்கிய ‘கூட்டுச் செயற்குழு’ ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் எதிர்கால அரசியல் பயணத்துக்கான திட்டங்களை வகுக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஐக்கிய மக்கள் சக்தியின் மாநாட்டின் போது, ஐக்கிய தேசியக் கட்சியுடனான இந்த அரசியல் பயணம் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்திக்குள் சில முக்கிய உட்கட்சி மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் எனத் தலைமைத்துவத்திற்குப் பலமான அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது.

கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றங்களை ஏற்படுத்தி, மக்கள் செல்வாக்குள்ள இளம் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என சஜித் பிரேமதாஸவிடம் கோரப்பட்டுள்ளது.

பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோருக்குச் சிரேஷ்ட உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் கௌரவப் பதவிகளை வழங்கிவிட்டு, அந்தப் பொறுப்புகளுக்கு இளம் பிரதிநிதிகளை நியமிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தவிசாளர் பதவியை ஏற்க மறுத்துள்ள நிலையில், வெற்றிடமாக உள்ள அந்தப் பதவிக்கு உடனடியாக ஒருவரை நியமிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த தேர்தலை எதிர்கொள்வதற்கு இத்தகைய மறுசீரமைப்புகள் இன்றியமையாதவை என்பதே கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களின் நிலைப்பாடாக உள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

45 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

86 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

76 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0