நுவரெலியா மாவட்டத்தில் நச்சுப் போதைப்பொருள் தடுப்பு துண்டுப்பிரசுரப் பிரச்சாரம் ஆரம்பம்.!
‘ஒன்றாக நச்சுப் போதைப்பொருள் அச்சுறுத்தலை வெல்வோம்’ என்ற தேசிய பிரச்சாரத்தின் கீழ், நுவரெலியா மாவட்டத்திற்கான நிகழ்வு பெப்ரவரி 11, 2026 அன்று நுவரெலியாவின் கிரிகோரி பூங்காவில் நடத்தப்படவுள்ளது.
இந்த நிகழ்வு, கௌரவ ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனை முன்னிட்டு, நுவரெலியா மாவட்ட மக்களுக்குள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கி, ஒட்டுப்பிரசுரங்கள் ஒட்டும் நடவடிக்கை இன்று (09.02.2026) ஹட்டனில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வு நுவரெலியா மாவட்ட மேம்பாட்டுக் குழுத் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராச்சி, அதேபோல் பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
மேலும், இந்த தேசிய விழிப்புணர்வு நடவடிக்கை நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஏனைய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


