உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

இலங்கை கடற்பரப்பில் மீனவப் படகுகள் மீது தாக்குதல் அரசு விசாரணை தீவிரம்-ரத்ன கமகே தெரிவிப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
22 பார்வைகள்

இலங்கை கடற்பரப்பில் இரண்டு மீனவப் படகுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக அரசாங்கம் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கடற்றொழில் பிரதிஅமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.
ஹிக்கடுவ பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.


குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை கடற்படைக்கும் வெளிவிவகார அமைச்சுக்கும் விசாரணை நடத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும், அதில் இந்திய கடற்படையோ இந்திய கடலோர காவல்படையோ இச்சம்பவத்தில் தொடர்புபடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த பிரதிஅமைச்சர் ரத்ன கமகே,


“கடந்த நாட்களில் எமது இரண்டு மீனவப் படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அண்டை நாடான இந்தியாவின் கடலோர காவல்படையினர் இதனை மேற்கொண்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், இது தொடர்பில் உண்மைகளை கண்டறிய அரசாங்கம் முறையான விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.எமது நாட்டு மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மிக முக்கியமானது. தாக்குதல் வெளிநாட்டு குழுவினராலா, உள்நாட்டு நபர்களாலா அல்லது வேறு அமைப்பினராலா மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து தெளிவான அறிக்கை பெறப்படும் வரை விசாரணைகள் தொடரும்” என தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

41 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

80 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

72 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

32 0 0