கணினி சார்ந்த குற்றங்களை தடுக்க புதிய பொலிஸ் பிரிவு.!
கணினி சார்ந்த குற்றங்களை தடுப்பதற்காக புதிய பொலிஸ் பிரிவொன்றை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.நேற்று பொல்பிட்டிய பொலிஸ் நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவர், தற்போது நாளொன்றுக்கு 23–25 சைபர் குற்றங்கள் பதிவாகும் நிலையில், குற்றங்களை வினைத்திறனுடன் விசாரணை செய்து தீர்ப்பதற்குத் தேவையான தொழில்நுட்பம் மற்றும் விசேட அறிவு ஆகியவற்றுடன் புதிய பிரிவும் நவீனமயமாக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுவரும் எனவும் குறிப்பிட்டார்.
அமைச்சர், இலங்கை பொலிஸ் சேவையை சிறந்த, வினைத்திறனான மற்றும் ஊழலற்ற திணைக்களமாக மாற்றுவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என்றும், திறமையான அதிகாரிகளை உயர்மட்டத்திற்குச் செல்வதற்கான சூழலை உருவாக்குவதற்கும், தவறிழைக்கும் அதிகாரிகளை நீக்குவதற்கான பொறிமுறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் வலியுறுத்தினார்.