ஹட்டன் அருகே இ.போ.ச பேருந்து சாரதி மீது தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் தாக்குதல்.!
டயகமவில் இருந்து ஹட்டன் நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான பேருந்தின் சாரதி மீது, அதே வீதியில் பயணித்த தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (07) முற்பகல் ஹட்டன் இ.போ.ச டிப்போவின் தரைக்கால முகாமையாளர் தெரிவித்தார். டயகமவில் காலை 6:30 மணிக்குப் பயணத்தைத் தொடங்கி ஹட்டன் நோக்கிச் சென்ற பேருந்து, பின்னால் துரத்தி வந்த தனியார் பேருந்தால் வழிமறித்து, சாரதி ஆசனத்தின் கதவைத் திறந்து தாக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
சாரதி மீது நடைபெற்ற இந்த தாக்குதலில், பேருந்தில் பயணித்த பாடசாலை மாணவர்கள் மற்றும் ஏராளமான பயணிகள் பாதிக்கப்பட்டனர். சம்பவத்தின் வீடியோ ஒரு பயணி மூலம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளது.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸில் முறைப்பாடு எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.