மூத்த ஊடகர் பாரதியின் நினைவு மலர் யாழ்ப்பாணத்தில் வெளியீடு.!
மூத்த ஊடகர் பாரதியின் ஓராண்டு நினைவு நாளை முன்னிட்டு, இன்று (07.02.2026) யாழ் ஹம்ஷியா மஹாலில் அவரது நினைவு மலர் வெளியீடு நடைபெற்றது.பாரதி, கடந்த ஆண்டு மாசி 9-ஆம் திகதி உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அவரது வரலாறு, நினைவுகள் மற்றும் சமூகத்திற்கான சேவைகள் இந்த மலரில் பதியப்பட்டுள்ளன.
நிகழ்வில் யாழ் பல்கலைப் பேராசிரியர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், ரசிகர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு பாரதியின் மனிதநேய பணிகள் மற்றும் ஊடக உலகிற்கு செய்த பங்களிப்புகளை நினைவுகூரினர்.“பாரதி ஒரு மனிதநேய ஊடகன்” என்ற மதிப்புரை மலரில் பிரதிபலிக்கப்பட்டு, சிறந்த தமிழ் ஊடகர்களுக்கு வழங்கப்படும் “பாரதி விருது” வருடாவருடம் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.இதன் மூலம் பாரதியின் நினைவும், ஊடகத் துறைக்கு அவர் வழங்கிய பங்களிப்பும் தொடர்ச்சியாக கௌரவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டது.