மட்டக்களப்பு வாழைச்சேனை, பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ராக்கெட் லாஞ்சர்கள்.!
மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் ஸ்வீடன் நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 ராக்கெட் லாஞ்சர்கள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.வாழைச்சேனை, குடும்பிமலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஸ்வீடன் நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்று ராக்கெட் லாஞ்சர்களே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.பொலன்னறுவை இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அரலகங்வில சிறப்புப் பணிக்குழு அதிகாரிகளுடன் இணைந்து இந்த ராக்கெட் லாஞ்சர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் வாழைச்சேனை காவல்துறை, பாலத்சேனை, குடும்பிமலைப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்தபோது யாரோ ஒருவரால் தோண்டி எடுக்கப்பட்டு அதே பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட 03 ஸ்வீடன் நாட்டில் தயாரிக்கப்பட்ட 84 மி.மீ ஆர்.சி.எல் எம்2 வகை ராக்கெட் லாஞ்சர்கள் பயன்படுத்த ஏற்றவை என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.