போராட்டங்களால் கொடுப்பனவுகளை அதிகரிக்க முடியாது-ஜனாதிபதி தெரிவிப்பு.!
வரும் 2027 ஆம் ஆண்டின் சம்பள உயர்வுவரை, வேறு எந்தவொரு கொடுப்பனவும் அதிகரிக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றும் நிகழ்வில், மத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனை குறிப்பிட்டார்.ஜனாதிபதி கூறியதாவது:
“2025, 2026 மற்றும் 2027 ஆண்டுகளில் அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக 33 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். இதற்கமைய, 2027 ஆம் ஆண்டில் மூன்றாவது சம்பள உயர்வு வழங்கப்பட்ட பின்னர், வரவு–செலவு திட்டத்தின் தாக்கத்தை கருத்தில் கொண்டு ஏனைய கொடுப்பனவுகள் குறித்து பரிசீலனை செய்யப்படும். அதுவரை யாரும் எத்தகைய போராட்டங்களை முன்னெடுத்தாலும் கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது.”