ஏமாற்று அரசியலுக்கு இனி இடமில்லை-ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை.!
பொய் வாக்குறுதிகளை வழங்கி நாட்டின் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்ற முடியும் என அரசு இனி கருதக்கூடாது என்று ஐக்கிய மக்கள் சக்தி கடுமையாக எச்சரித்துள்ளது.மக்கள் அரசின் உண்மை நிலையை தற்போது தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளனர் என்றும், ஏமாற்று அரசியலுக்கு இனி இடமில்லை என்றும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
ஆட்சிக்கு முன்னர் வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் பெரும்பாலானவை இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனவும், இதனால் மக்கள் விரக்தியடைந்துள்ளனர் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளுக்குப் பொறுப்பேற்க வேண்டியது அரசே என அவர் வலியுறுத்தியுள்ளார்.எதிர்வரும் தேர்தல்கள் மக்களின் தீர்ப்பை வெளிப்படுத்தும் முக்கியமான வாய்ப்பாக அமையும் என்றும், அந்தத் தேர்தல்களில் மக்கள் அரசுக்கு தக்க பதிலை அளிப்பார்கள் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டுள்ளார்.