உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

நாடாளுமன்றத்தில் நாமல் மீது லக்மாலி ஹேமச்சந்திரா கடும் விமர்சனம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
18 பார்வைகள்

ஆளுங்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திரா, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், நாமல் ராஜபக்ஷ தன்னை இனத்தையும் மதத்தையும் முன்னிறுத்தும் அரசியல்வாதியாகக் காட்டிக் கொள்ள முயற்சிப்பதாகக் குறிப்பிட்டார்.


தெற்கு பகுதியில் மக்களிடையே வாக்கு கேட்டு அவர்களது ஆதரவுடன் நாடாளுமன்றத்துக்கு வரத் துணிவில்லாதவர் இன்று வீர வசனங்கள் பேசுவதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும், மக்களின் நலனைக் குறித்து பேசுவதற்கு அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை எனவும், நாட்டை பாதித்த அரசியல் அணியே தற்போது இன அடிப்படையிலான அரசியலை மீண்டும் முன்னிறுத்த முயற்சிக்கின்றது எனவும் லக்மாலி ஹேமச்சந்திரா குற்றஞ்சாட்டினார்.


அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், சிங்களரும் பௌத்தரும் நேர்மையான மக்கள் எனக் குறிப்பிட்டதுடன், தங்களை அந்த அடையாளங்களால் முன்வைக்கும் சில அரசியல்வாதிகள் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இன அடிப்படையிலான அரசியலுக்கு இனி இடமில்லை என்றும், அதுபோன்ற அரசியல் முயற்சிகள் இனி வெற்றி பெறாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

41 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

80 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

72 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

32 0 0