உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, இன்று (06.02.2026) வவுனியா மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெற்றது.காணி பிணக்குகளை சுமூகமாகத் தீர்ப்பதற்கான நோக்கில், விசேட காணி மத்தியஸ்த சபைகள் உருவாக்கப்பட்டு, வவுனியா மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டு முதல் அவை செயற்பட்டு வருகின்றன. இதன் கீழ், 2019 முதல் காணி மத்தியஸ்தர்களாகப் பணியாற்றி வந்தவர்களின் பதவிக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, புதிதாக ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதன்படி, கடந்த ஆண்டு இறுதியில் புதிய மத்தியஸ்தர்களுக்கான பயிற்சிகள் மற்றும் பரீட்சைகள் நடத்தப்பட்டதுடன், அவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட விசேட காணி மத்தியஸ்த சபை தவிசாளர், உதவி தவிசாளர் மற்றும் மத்தியஸ்தர்கள் என மொத்தம் 23 பேருக்கு இன்று நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.


இந்த நிகழ்வில், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ. சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் நா. கமலதாசன், வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மத்தியஸ்த சபை பயிற்றுவிப்பாளர் செ. விமலராஜா, மத்தியஸ்த சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் காண்டீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

40 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

80 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

72 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

32 0 0