கோர விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழப்பு.!
காரும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி இடம்பெற கோர விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளார். அத்துடன் முச்சக்கர வண்டியில் பயணித்த பெண்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அனுராதபுரம், தம்புத்தேகமை பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டியின் சாரதியான தம்புத்தேகமை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டியில் பயணித்த அதே பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதியான 71 வயது வயோதிபரைக் கைது செய்துள்ள பொலிஸார், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.