உயிர் அச்சுறுத்தல் காரணமாக என்.பி.பி பிரதேச சபை உறுப்பினர் நாட்டை விட்டு தப்பியோட்டம்.!
தேசிய மக்கள் சக்தியின் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் சின்னராசா றஜீவா இனந்தெரியாத நபர்களால் மூன்று தடவைகள் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலால் உயிராபத்துக்கு அஞ்சி நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தகவலை என்.பி.பியின் யாழ் மாவட்ட கிளை உறுதிப்படுத்தியுள்ளது.தினகரன் செய்திப்பிரிவு இவரை தொடர்பு கொள்ள முயற்சிக்கின்றது. தொடர்பு கிடைக்கும் பட்சத்தில் மேலதிக தகவல்கள் வெளியிடப்படும்.