பெருமளவு கஞ்சா கைப்பற்றல்.!
களனி – அங்கொடை வீதிப் பகுதியில் சுமார் 32 கிலோ கிராம் கேரள கஞ்சா களனி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட வாகனம் ஒன்றை சோதனையிட்டபோது மூன்று பொதிகளில் இருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும், வாகனத்தில் இருந்தவர்கள் அவற்றை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் களனி பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் அசங்கவின் மேற்பார்வையிலும், பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ். ரத்நாயக்கவின் அறிவுறுத்தலின் பேரிலும் நடத்தப்பட்டு வருகின்றன.