உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பிரபலமான ஹோட்டலில் மறைந்திருந்த தொழிலதிபர் கைது.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
18 பார்வைகள்

சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளியொன்று தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்பு மற்றும் புலனாய்வுப்பணியகம் கைது செய்துள்ளது.இந்த சம்பவத்தின் முக்கிய சந்தேகநபர் நேற்று (18) ஹிக்கடுவ பகுதியில் உள்ள பிரபல ஹோட்டலில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொரளையை சேர்ந்த 43 வயதுடைய தொழிலதிபர் என்றும் கூறப்படுகிறது.தனது வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய பெண்ணின் நிர்வாணத்தை காணொளியாக பதிவு செய்து, அந்த காணொளியை வாட்ஸ்அப் குழு மூலம் சமூக ஊடகங்களில் பரப்பியமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபருக்கு உதவி செய்து, பொலிஸாரிடமிருந்து ஆதாரங்களை மறைத்த எஹெலியகொட பகுதியைச் சேர்ந்த 44 மற்றும் 55 வயதுடைய இரண்டு நபர்களும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்புக்குப் பொறுப்பான டிஐஜியின் அறிவுறுத்தலின் பேரில் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து சந்தேகபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.சம்பவம் குறித்து அளுத்கம நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், முக்கிய சந்தேகநபருக்கு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

51 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

22 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

40 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

47 0 0