காட்டு யானை தாக்கியதில் மனைவி உயிரிழப்பு – கணவர் வைத்தியசாலையில்.!
பொலன்னறுவை, சிறிபுர கலுகெலே வெலிய பகுதியில் இன்று (13) காட்டு யானை தாக்குதலுக்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு, அவரது கணவர் படுகாயமடைந்து தெஹியத்தகண்டிய பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தம்பதியினர் தங்களது வயலுக்குச் சென்றபோதே காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளானதாக தெரிய வந்துள்ளது.