உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

இலங்கையில் இரண்டு அமெரிக்க பிரஜைகள் கைது: ஹோட்டல் அறையில் சிக்கிய பொருள்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
28 பார்வைகள்

இலங்கையில் இரண்டு அமெரிக்க பிரஜைகள் தேசிய வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த(11)ஆம் திகதி ஹார்டன் சமவெளி தேசிய பூங்காவில் உள்ள உலக முடிவு இயற்கை பாதையின் நுழைவாயிலில் சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்டுகின்றது.வெளிநாட்டினரின் பொதிகளில் பூச்சி மாதிரிகள், இரசாயனங்கள் மற்றும் சிறிய விலங்குகளைப் பிடிக்கும் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இதனையடுத்து அவர்கள் தங்கியிருந்த நுவரெலியாவில் உள்ள பிரபலமான சுற்றுலா ஹோட்டல் அறையை சோதனை செய்தபோது, நாட்டிற்கு மட்டுமே சொந்தமான பிற பூச்சிகளின் சுமார் 15 மாதிரிகள் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து (12) ஆம் திகதி நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய போது வெளிநாட்டினரின் கடவுச்சீட்டுகளை காவலில் எடுக்கவும், அவர்களை தலா 1 மில்லியன் ரூபாய் பிணையில் விடுவிக்கவும், வழக்கை 2026.01.26 அன்று மீண்டும் விசாரிக்கவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விசேட வைத்தியர் ஒருவர் மாயம்.!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன்…

68 0 0
இலங்கை செய்திகள்

பெக்கோ சமனின் தாய் சுட்டுக் கொ*லை; மற்றுமொரு சந்தேகநபர் கைது.!

திட்டமிட்ட குற்றவாளியான ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில்…

46 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசு சிறந்த வழியில் பயணிக்கின்றது; ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்.!

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு என்று கூறிக்கொண்டு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் மத்தியில் செல்கின்றனர் என்றும், இவர்களின்…

63 0 0
இலங்கை செய்திகள்

ரயில் மோதி முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு.!

கடற்கரை வீதி ரயில் பாதையின் அலுத்கம, விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள ரயில் கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் ஒருவர்…

68 0 0