உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

அரசாங்க வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப டிஜிட்டல் அட்டை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
22 பார்வைகள்

அரசாங்க நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப டிஜிட்டல் அட்டை முறையை அறிமுகப்படுத்த ஜனாதிபதி சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.அரசாங்க நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களுக்கு எரிபொருள் தேவைக்கேற்ப (இணையம்) வங்கி முறை மூலம் தொடர்புடைய நிதியை திருப்பிச்செலுத்தவும், தனிப்பட்ட தலையீட்டை குறைத்து அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனுடன் எரிபொருளை வாங்கவும் இந்த முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

தற்போது, இலங்கை வங்கியும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனமும் இணைந்து டிஜிட்டல் அட்டைகள் மூலம் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளன.

அதன்படி, ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கான மேற்படி முறையை ஒரு முன்னோடித் திட்டமாக செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதன் வெற்றியின் அடிப்படையில், ஏனைய அரசு நிறுவனங்களுக்கும் அதே முறையை செயல்படுத்தவும் ஜனாதிபதி இந்த முன்மொழிவை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விசேட வைத்தியர் ஒருவர் மாயம்.!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன்…

65 0 0
இலங்கை செய்திகள்

பெக்கோ சமனின் தாய் சுட்டுக் கொ*லை; மற்றுமொரு சந்தேகநபர் கைது.!

திட்டமிட்ட குற்றவாளியான ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில்…

46 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசு சிறந்த வழியில் பயணிக்கின்றது; ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்.!

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு என்று கூறிக்கொண்டு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் மத்தியில் செல்கின்றனர் என்றும், இவர்களின்…

63 0 0
இலங்கை செய்திகள்

ரயில் மோதி முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு.!

கடற்கரை வீதி ரயில் பாதையின் அலுத்கம, விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள ரயில் கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் ஒருவர்…

68 0 0