ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கு விசாரணை அடுத்த மாதம்.!
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிரான ஊழல் வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (13) உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டில் ரமித் ரம்புக்வெல்ல இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.