சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் சடலமாக மீட்பு.!
கண்டி – பல்லேகல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் உயிர்மாய்த்துள்ள சம்பவம் நேற்று (11) இடம்பெற்றுள்ளது.
அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறை அறையில் நேற்று (11) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மாவனெல்லயைச் சேர்ந்த 33 வயதான நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரே இவ்வாறு உயிர்மாய்த்தள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பல்லேகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.