1997
இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது.
2006
அல்லைப்பிட்டிப் படுகொலைகள்: யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் 13 பொதுமக்களை இலங்கைக் கடற்படையினர் படுகொலை செய்தனர்.
1830
எக்குவாடோர் கொலம்பியாவிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1846
மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: ஐக்கிய அமெரிக்கா மெக்சிக்கோ மீது போரை அறிவித்தது.
1861
பெரும் வால்வெள்ளி ஒன்று அவுஸ்திரேலியாவில் வின்சர் நகரில் அவதானிக்கப்பட்டது.
1861
பாகிஸ்தானில் முதலாவது தொடருந்து சேவை கராச்சி முதல் கோத்ரி வரை ஆரம்பிக்கப்பட்டது.
1880
நியூ செர்சியில் மென்லோ பூங்காவில் தாமசு ஆல்வா எடிசன் மின்சாரத்தில் இயங்கும் தனது முதலாவது தொடருந்தை சோதித்தார்.
1888
பிரேசில் பேரரசு அடிமைமுறையை இல்லாதொழித்தது.
1939
முதலாவது எஃப்எம் வானொலி நிலையம் ஐக்கிய அமெரிக்காவில் கனெடிகட் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1940
இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியின் இராணுவம் மியூசே ஆற்றைத் தாண்டி பிரான்சினுள் புகுந்தது. முற்றுகை ஆரம்பமானது.
1940
இரண்டாம் உலகப் போர்: நெதர்லாந்தினுள் நாட்சி ஜெர்மனியர் புகுந்ததை அடுத்து அதன் அரசி வில்லெல்மினா பிரித்தானியாவுக்கும் இளவரசி ஜூலியானா தனது குழந்தைகளுடன் கனடாவுக்கும் தப்பி ஓடினர்.
1943
இரண்டாம் உலகப் போர்: வட ஆப்பிரிக்காவில் ஜேர்மனிய, இத்தாலியப் படையினர் கூட்டுப் படைகளிடம் சரணடைந்தனர்.
1952
இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையின் முதலாவது அமர்வு இடம்பெற்றது.
1954
சிங்கப்பூரில் தேசியத்துக்கு எதிராக சீனப் பாடசாலை மாணவர்களின் போராட்டம் இடம்பெற்றது.
1958
அல்ஜியர்சில் பிரெஞ்சு இராணுவ அதிகாரிகள் சிலர் இராணுவப் புரட்சியில் ஈடுபட்டனர்.
1960
உலகின் ஏழாவது உயர மலையான தவுளகிரியின் உச்சியை சுவிட்சர்லாந்து மலையேறிகள் இருவர் முதன் முதலில் அடைந்தனர்.
1967
சாகிர் உசேன் இந்தியாவின் முதலாவது முஸ்லிம் குடியரசுத் தலைவர் ஆனார்.
1969
மலேசியாவில் கோலாலம்பூரில் சீன மலேசியர்களுக்கும் மலே இனத்தவர்களுக்கும் இடையில் இனக்கலவரம் மூண்டது. 190 பேர் கொல்லப்பட்டனர்.
1971
வங்காளதேசம், தெம்ரா நகரில் 900 இற்கும் அதிகமான வங்காள இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1972
ஜப்பான், ஒசாக்காவில் பல்பொருள் அங்காடி ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் சிக்கி 118 பேர் உயிரிழந்தனர்.
1981
ரோம் நகரில் புனித பேதுரு சதுக்கத்தில் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் திருத்தந்தை காயமடைந்தார்.
1985
பிலடெல்பியாவில் மூவ் என அவைக்கப்படும் கறுப்பின விடுதலைக் குழு ஒன்றின் தலைமையகம் மீது காவல்துறையினர் குண்டு வைத்துத் தகர்த்ததில், ஐந்து சிறுவரக்ள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.
1989
சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் உண்ணாநோன்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
1996
வங்காள தேசத்தில் வீசிய கடும் புயலில் சிக்கி 600 பேர் வரையில் இறந்தனர்.
1998
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் சீனர்களுக்கெதிராக இனக்கலவரம் ஆரம்பமானது.
1998
இந்தியா மே 11 இற்குப் பின்னர் மேலும் இரண்டு அணுகுண்டுச் சோதனைகளை மேற்கொண்டது. இந்தியா மீது ஐக்கிய அமெரிக்கா, மற்றும் ஜப்பான் பொருளாதாரத் தடையைக் கொணர்ந்தன.
2005
உஸ்பெக்கிஸ்தானில் அண்டிஜான் என்ற இடத்தில் காவற்துறையினர் போராட்டக் காரர் மீது சுட்டதில் 187 பேர் கொல்லப்பட்டனர்.
2006
திமுக தலைவர் மு. கருணாநிதி 5வது முறையாக தமிழக முதல்வர் பதவியை ஏற்றார்.
2007
திருகோணமலை மொறவேவாப் பகுதியில் பொங்குதமிழ் உட்படப் பலநிகழ்வுகளில் முன்னின்று கலந்துகொண்ட வணக்கத்துக்குரிய நந்தரத்ன தேரோ இனம் தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்டார்.
2011
பாகிஸ்தானில் சார்சாதா மாவட்டத்தில் இரண்டு குண்டுகள் வெடித்ததில், 98 பேர் கொல்லப்பட்டனர், 140 பேர் காயமடைந்தனர்.
2014
துருக்கியில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பில் 301 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
2018
இந்தோனேசியாம் சுராபாயாவில் மூன்று கிறித்தவத் தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.



