1824
லண்டன் தேசிய அருங்காட்சியகம் பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்டது.
1837
நியூயார்க் நகர வங்கிகள் செயலிழந்தன, வேலைவாய்ப்பின்மை பெருமளவில் அதிகரித்தது.
1849
நியூயார்க் நகரில் மன்ஹாட்டனில் ஆஸ்டோர் ஒப்பேரா மாளிகையில் இரு நடிகர்களுக்கிடையே ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து இடம்பெற்ற கலவரத்தில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். 120 பேர் காயமடைந்தனர்.
1857
சிப்பாய்க் கிளர்ச்சி: இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் மீரட் என்ற இடத்தில் சிப்பாய்கள் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார்கள். இந்திய விடுதலைப் போராட்டம் ஆரம்பமானது.
1865
அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்கக் கூட்டுப் படைகளினால் ஜோர்ஜியாவில் கைது செய்யப்பட்டார்.
1871
பிரான்சுக்கும் புரூசியாவுக்கும் இடையிலான போர் பிரான்சு சரணடைந்ததை அடுத்து முடிவுக்கு வந்தது.
1877
உருமேனியா உதுமானியப் பேரரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1908
அன்னையர் நாள் முதன் முதலில் அமெரிக்காவில் மேற்கு வேர்ஜினியாவில் கொண்டாடப்பட்டது.
1922
கிங்மன் பாறையை ஐக்கிய அமெரிக்கா கைப்பற்றியது.
1940
இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனி தவறுதலாக செருமானிய நகரான பிரைபர்கின் மீது குண்டுகளை வீசியது.
1940
இரண்டாம் உலகப் போர்: பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பேர்க் ஆகிய நாடுகளுக்குள் ஜேர்மனி ஊடுருவியது.
1940
நெவில் சேம்பர்லேன் பதவி துறந்ததை அடுத்து, வின்ஸ்டன் சர்ச்சில் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரானார்.
1940
இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் ஐஸ்லாந்தினுள் ஊடுருவியது.
1941
இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனிய வான்படையின் தாக்குதலில் லண்டனில் மக்களவை சேதத்துக்குள்ளாகியது.
1946
சவகர்லால் நேரு இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.
1946
அமெரிக்கா முதல்தடவையாக வி-2 ஏவுகணையை வெற்றிகரமாக ஏவியது.
1960
அமெரிக்காவின் டிரைட்டன் புவியை கடலடியாக சுற்றி வந்த முதலாவது நீர்மூழ்கிக் கப்பல் என்ற சாதனையைப் பெற்றது.
1975
சோனி நிறுவனம் பீட்டாமாக்சு என்ற காணொளி நாடாப் பதிப்பியை ஜப்பானில் வெளியிட்டது.
1979
மைக்குரேனேசிய கூட்டாட்சி நாடுகள் சுயாட்சி பெற்றன.
1981
பிரான்சுவா மித்தரான் பிரான்சின் முதலாவது சோசலிச அரசுத்தலைவராகத் தேர்த்நெடுக்கப்பட்டார்.
1993
தாய்லாந்தில் விளையாட்டுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இடம்பெற்ற தீ விபத்தில் பெரும்பான்மையாக இளம் பெண்கள் அடங்கிய 188 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
1994
நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பின அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1996
எவரெஸ்ட் சிகரத்தில் இடம்பெற்ற கடும் புயலில் சிக்கி 8 மலையேறிகள் உயிரிழந்தனர்.
1997
ஈரானில் ஆர்டேக்குல் அருகே நிகழ்ந்த 7.3 Mw அளவு நிலநடுக்கத்தில் 1,567 பேர் உயிரிழந்தனர், 2,300 பேர் காயமடைந்தனர்.
2005
சியார்சியாவின் திபிலீசி நகரில் அமெரிக்க அரசுத்தலைவர் ஜார்ஜ் வாக்கர் புஷ் மக்கள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் மீது கைக்குண்டு ஒன்று வீசப்பட்டது. ஆனாலும் அது வெடிக்கவில்லை.
2013
மேற்கு அரைக்கோளத்தின் முக உயர்ந்த கட்டடம் என்ற பெயரை 1 உலக வர்த்தக மையம் பெற்றது.




