இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
காலி – கரந்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திவியகஹவெல பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று கரந்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்டவர் கரந்தெனிய, திவியகஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையவர் ஆவார்.
ADVERTISEMENT
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலைக் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரைக் கைது செய்வது தொடர்பில் கரந்தெனிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.