அரச காப்புறுதி நிறுவனமான இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அரிசி ஆலை உரிமையாளருக்கு 17 லட்சம் ரூபாயினை காப்புறுதி இழப்பீட்டு தொகையாக வழங்கியுள்ளது.
சுன்னாகம் பகுதியில் உள்ள அரிசி ஆலையொன்றில் 30 விவசாயிகளின் நெல் களஞ்சியபடுத்தபட்டிருந்த நிலையில் டிசம்பர் மாதம் நிலவிய சீரற்ற கலாநிலையினால் வெள்ளம் உட்புகுந்து குறித்த நெல் மூட்டைகள் அழிவுக்குள்ளாகியிருந்தது.
இந்நிலையில் இலங்கை காப்புறுதி கூட்டுதாபனத்தின் சங்கானை கிளையில் குறித்த நபர் ஏற்கனவே 44000 ரூபாய் காப்புறுதி வருடாந்த தொகையாக செலுத்திய நிலையில் 17 லட்சத்து 9 ஆயிரம் ரூபாயினை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் வடபிராந்திய பொதுகாப்புறுதி முகாமையாளர் அஜித்குமார் வழங்கி வைத்தார்.
இதன் பொழுது சங்கானை கிளை முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.



