உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
21 வெள்ளி

வலி. வடக்கு காணி விடுவிப்புப் போராட்டம் – ஈ.பி.டி.பி பிரதேச சபை உறுப்பினர் பொலிஸில் வாக்குமூலம்!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
65 பார்வைகள்

பலாலி காணி விடுவிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பில், ஈ.பி.டி.பி கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்திடம் பலாலி பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

​வலி வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி, பலாலி மற்றும் மயிலிட்டி பகுதி மக்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களுக்கு ஈ.பி.டி.பி கட்சியினர் தொடர்ந்தும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.

​இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (16.08.2026) பலாலியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, அனுஷியா ஜெயகாந்த் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக பலாலி பொலிஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

​இதன் தொடர்ச்சியாக, பலாலி பொலிஸ் நிலையத்திற்கு இன்று (21) அழைக்கபட்ட அனுஷியா ஜெயகாந்திடம் பொலிஸார் முறையான வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டனர்.

​இந்த விசாரணையின் போது, சட்டத்தரணி ஸ்ரனிஸ்லஸ் செலஸ்ரின் ஈ.பி.டி.பி கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் வலி வடக்கு நிர்வாக செயலாளர் இ. ஜெயபாலசிங்கம் (அன்பு) ஆகியோரும் அவருடன் சென்றிருந்தனர்.

​இதேநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறிய ஈ.பி.டி.பி உறுப்பினர்கள், உடனடியாகவே மயிலிட்டியில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்திலும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அன்னாசிப் பழங்களை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ய ஆயத்தம்

இலங்கையின் அன்னாசிப்பழங்களை முதன்முறையாக பாகிஸ்தான் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கான பொதியிடும் பணிகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, பாகிஸ்தானிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும்…

48 0 0
இலங்கை செய்திகள்

எரிபொருள் இறக்குமதிக்கான செலவு அதிகரிப்பு!

இந்த ஆண்டின் முதல் பாதியில் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு, 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கணிசமாக அதிகரித்துள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.…

50 0 0
இலங்கை செய்திகள்

யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய ஆலய சம்பவம் – சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் பிரான்பற்று முருகன் ஆலய திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட அதிகளவான ஒளிப்பாவனையால் 200க்கும் மேற்பட்டோர் கண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில்…

59 0 0
இலங்கை செய்திகள்

AI ஐ அதிகாரிகளுக்கு மாற்றீடாக அன்றி அவர்களின் வினைத்திறனை அதிகரிக்க பயன்படுத்த வேண்டும்!

செயற்கை நுண்ணறிவானது (Artificial Intelligence) மனித அதிகாரிகளை மாற்றுவதற்காக அல்லாமல், அவர்களின் வினைத்திறனை அதிகரித்து மக்களுக்கான சேவைகளைத் துரிதப்படுத்துவதற்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், தொழில்நுட்பம் எத்துணை வளர்ச்சியடைந்தாலும்…

44 0 0