உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
21 வெள்ளி

பெருவில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

உலக செய்திகள் 13 மணி நேரம் முன்
77 பார்வைகள்

மத்திய பெருவில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

எனினும், உடனடி உயிரிழப்புகளோ அல்லது சேதங்களோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலநடுக்கம் 61.52 மைல் (99 கிலோமீட்டர்) ஆழத்தில் ஏற்பட்டதாகவும், இதன் மையம் ஆண்டிஸ் மலைத்தொடரில் உள்ள ‘அனிசோ’ (Aniso) பகுதிக்கு வடமேற்கே 19.26 மைல் (31 கிலோமீட்டர்) தொலைவில் அமைந்திருந்ததாகவும் USGS கூறியது.

நிலநடுக்கம் ஏற்பட்ட ஆழம் காரணமாகவே பெரிய அளவிலான சேதங்கள் தவிர்க்கப்பட்டதாக பெருவின் புவி இயற்பியல் நிறுவனத்தின் (IGP) தலைவர் ஹெர்னாண்டோ டவேரா தெரிவித்தார்.

பெருவின் புவி இயற்பியல் நிறுவனம் ஆரம்பத்தில் இந்த நிலநடுக்கத்தை 7.2 என்று மதிப்பிட்டிருந்தது.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய செம்பு உற்பத்தியாளரான இந்த தென் அமெரிக்க நாடு, ‘பசிபிக் நெருப்பு வளையம்’ (Pacific Ring of Fire) என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளது.

இப்பகுதியில்தான் உலகின் சுமார் 85 சதவீத நிலநடுக்கச் செயல்பாடுகள் பதிவாகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

எல் நினோ தாக்கத்தால் பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்து கட்டுப்பாடு!

எல் நினோ (El Niño) காரணமாகப் பொழிந்த குறைந்த மழையின் விளைவாக, பனாமா கால்வாயை நிர்வகிக்கும் நிறுவனம் அக்குறிப்பிடப்பட்ட முக்கிய நீர்வழிப்பாதையின் வழியாகச் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கையைக்…

67 0 0
உலக செய்திகள்

10 பலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை!

தென்கொரியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சிகள் நிறைவடையவுள்ள நிலையில், வடகொரியா வியாழக்கிழமை 10க்கும் மேற்பட்ட குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதித்துள்ளதை அடுத்து,…

66 0 0
உலக செய்திகள்

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் – 16 பேர் பலி!

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரஷ்யா இரவு முழுவதும் நடத்திய தொடர் ஏவுகணைத் தாக்குதல்களில் சுமார் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள்…

57 0 0
உலக செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிராக பொருளாதாரப் போர் தொடுப்பதாக எச்சரித்ததைத் தொடர்ந்தும், ஐக்கிய அரபு…

80 0 0