தடுப்புச் சுவர்களை புனரமைப்பதற்கான பணிகள் ஆரம்பித்து வைப்பு.!
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா புயலின் காரணமாக சேதமடைந்த நோர்வூட் முதல் மஸ்கெலியா வழி நல்லத்தண்ணி வரையிலான பிரதான வீதியில் உள்ள பக்கத் தடுப்புச் சுவர்களை புனரமைப்பதற்காக 86,746,198.17 ரூபாய் பெறுமதியான அபிவிருத்தித் திட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த ஆரம்ப நிகழ்வில் நோர்வூட் பிரதேச வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


