விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!
குருநாகல் – புத்தளம் வீதியின் பரமாகந்த சந்திக்கருகில் உள்ள தோனிகல, நவ கம்மன பகுதியில் இன்று திங்கட்கிழமை (20) காலை 7.20 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்துள்ளார்.
குறித்த வீதியில் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து சாரதி, வீதியின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு பேருந்தை கடந்து முன்னோக்கிச் செல்ல முற்பட்டுள்ளார்.
இதன்போது சாரதியின் அலட்சியப் போக்கு காரணமாக, எதிர் திசையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளைச் செலுத்தி சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.