• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, July 10, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் ஜே.வி.பி. அரசின் நிலைப்பாடு என்ன? – ஈ.பி.டி.பி. கேள்வி.!

Mathavi by Mathavi
July 10, 2026
in இலங்கை செய்திகள்
0
மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் ஜே.வி.பி. அரசின் நிலைப்பாடு என்ன? – ஈ.பி.டி.பி. கேள்வி.!
Share on FacebookShare on Twitter

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டினுள் இருக்கின்ற மக்களின் காணிகள் தொடர்பாக தற்போதைய அரசாங்கம் தங்களுடைய சரியான நிலைப்பாட்டினை வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈ.பி.டி.பி. கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ் பிரதேசங்களில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஜே.வி.பி. பிரதிநிதிகளுக்கு இருக்கின்ற நிலையில் எமது மக்கள் ஏமாற்றப்படக்கூடாது எனவும் தெரிவித்தார்.

உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற அடிப்படையில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற காணிகளை விடுவிக்குமாறு முன்னெடுக்கப்படுகின்ற மயிலிட்டிப் பிரதேச மக்களின் அமைதிவழிப் போராட்டம் இன்று 12 ஆவது வாரமாக முன்னெடுக்கப்பட்ட நிலையில், குறித்த போராட்டத்திற்கு தார்மீக ரீதியிலான ஆதரவை வழங்கும் வகையில், போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ஸ்ரீகாந் பன்னீர்செல்வத்தினால் குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
‘மக்களின் காணி மக்களுக்கே சொந்தம் என்ற கோட்பாட்டினை முன்வைத்து கடந்த காலங்களில் எமக்கு கிடைத்த மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் பலத்திற்கு அமைய, பல்லாயிரக்கணக்கான தனியார் காணிகளை கட்டம்கட்டமாக விடுவித்து வந்தோம். இந்நிலையில், தற்போதைய அரசாங்கத்தினர், மக்களின் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படும் என்ற வாக்குறுதியை மக்களுக்கு வழங்கி வாக்குளைப் பெற்றுக் கொண்டனர்.

ஆனால், தற்போது தங்களுடைய வாக்குறுதியை மறந்து ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

காணி விடுவிப்பு தொடர்பாக ஜனாதிபதி ஒரு கருத்தினை தெரிவிக்கின்றார். பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் இன்னுமொரு கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். அந்தக் கட்சி சார்பாக எமது மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்கள் வேறுவிதமான கதையை சொல்கின்றார்கள்.

இவ்வாறு எங்களுடைய மக்களை ஏமாற்றாமல் காணி விடுவிப்பு தொடர்பான உண்மையான நிலைப்பாட்டினை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.

இந்த விடயத்தில் எங்களுடைய மக்களின் வாக்குகளைப் பெற்றக்கொண்ட ஜே.வி.பி. பிரதிநிதிகள், வெறுமனவே தங்களுடைய கட்சியின் அரசியலையும் வேலைத்திட்டத்தினையும் எமது மக்களிடம் எடுத்து வருகின்ற ஏஜென்டுகளாக இருக்காமல், எங்களுடைய மக்களின் எதிர்பார்ப்புக்களை தென்னிலங்கைக்கு எடுத்துச் செல்கின்ற எமது மக்களின் பிரதிநிதிகளாக அவர்களின் செயற்பாடுகள் அமைய வேண்டும்.

இந்நிலையில், எங்களைப் பொறுத்தவரையில் தனியார் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்பட வேண்டும். இவ்வாறான நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கபடுகின்ற சாத்வீகப் போராட்டங்கள் அனைத்திற்கும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களினதும் தார்மீக ஆதரவு தொடரும் என்பதை தெரிவித்துக்கு கொள்கின்றோம்’ என்று தெரிவித்தார்.

இப்போராட்டத்தின் இறுதியில் ஏற்பாட்டாளர்களினால், தங்களுடைய அபிலாசைகளை வெளிப்படுத்திய மகஜர் ஒன்று கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்டது.

Related Posts

சிறைச்சாலை மோதலுக்குப்பொறுப்பேற்ற நீதி அமைச்சருக்கு ரஞ்சன் ராமநாயக்க பாராட்டு

சிறைச்சாலை மோதலுக்குப்
பொறுப்பேற்ற நீதி அமைச்சருக்கு ரஞ்சன் ராமநாயக்க பாராட்டு

by selvan
July 10, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம், கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு உள்முரண்பாடே தவிர, அது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செயல்...

போகம்பறை சிறைச்சாலையை மீண்டும் திறக்கும் முடிவை அரசு மீள்பரிசீலனை செய்ய வேண்டும்!

போகம்பறை சிறைச்சாலையை மீண்டும் திறக்கும் முடிவை அரசு மீள்பரிசீலனை செய்ய வேண்டும்!

by selvan
July 10, 2026
0

கண்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள போகம்பறை சிறைச்சாலையை மீண்டும் திறப்பதற்கு அரசு எடுத்துள்ள அவசர முடிவை உடனடியாக மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி...

சுரேஷ் சலேவின் ரிட் மனு ஜூலை 17 இற்கு ஒத்திவைப்பு

சுரேஷ் சலேவின் ரிட் மனு ஜூலை 17 இற்கு ஒத்திவைப்பு

by selvan
July 10, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைப்பதற்கு எதிராக அரச புலனாய்வுப் பிரிவின்...

துரிதகதியில் விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவை மேற்கொள்க.!

துரிதகதியில் விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவை மேற்கொள்க.!

by Mathavi
July 10, 2026
0

முல்லைத்தீவு மாவட்டத்தில் 3,046 மெற்றிக் தொன் அளவில் 2025ஆம் ஆண்டின் சிறுபோக நெல்லும், 4,172 மெற்றிக்தொன் அளவில் 2025/2026 பெரும்போக நெல்லும் களஞ்சியசாலைகளில் தேங்கி காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய...

அனுராதபுரம் வைத்தியசாலையில் கழிவகற்றலில் பாரிய மோசடி – சிவில் புலனாய்வு முன்னணி குற்றச்சாட்டு!

அனுராதபுரம் வைத்தியசாலையில் கழிவகற்றலில் பாரிய மோசடி – சிவில் புலனாய்வு முன்னணி குற்றச்சாட்டு!

by selvan
July 10, 2026
0

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகளை அகற்றும் ஒப்பந்தத்தில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ள சிவில் புலனாய்வு முன்னணி, இது தொடர்பாகச் சுகாதார...

‘நீதம்’ சட்ட இதழ் வெளியீடு.!

‘நீதம்’ சட்ட இதழ் வெளியீடு.!

by Mathavi
July 10, 2026
0

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் யாழ். பல்கலைக்கழக சட்ட மாணவர் சங்கம் இணைந்து முன்னெடுக்கும் 'நீதம்' சட்ட இதழின் வெளியீட்டு விழா நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது. யாழ்....

சிறப்பாக இடம்பெற்ற நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா.!

சிறப்பாக இடம்பெற்ற நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா.!

by Mathavi
July 10, 2026
0

நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா திருப்பலியை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (10) காலை குருக்கள் இணைந்து கூட்டுத்திருப்பலியாக ஒப்புக் கொடுத்தனர். தாழ்வுபாடு பங்குத்தந்தை...

மட்டக்களப்பில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு.!

மட்டக்களப்பில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு.!

by Mathavi
July 10, 2026
0

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் கடந்த 09 தினங்களில் 35க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் டெங்கின் தாக்கத்தினை கட்டுப்படுத்தவேண்டுமானால் பொதுமக்களின் பங்களிப்பு அவசியம் எனவும்...

யாழில் யாசகம் பெற்றோரை அகற்றிய பொலிஸார்.!

யாழில் யாசகம் பெற்றோரை அகற்றிய பொலிஸார்.!

by Mathavi
July 10, 2026
0

யாழ். நகர்ப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் விதமாகவும் சுற்றுலாவிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலும் நடமாடிய 30 இற்கும் அதிகமான யாசகர்கள் இன்று யாழ் பொலிஸாரின் பங்களிப்புடன்...

டெங்கு நுளம்புகள் பெருகுவதை தடுக்க மஸ்கெலியா பிரதேச சபை நடவடிக்கை.!

டெங்கு நுளம்புகள் பெருகுவதை தடுக்க மஸ்கெலியா பிரதேச சபை நடவடிக்கை.!

by Mathavi
July 10, 2026
0

மஸ்கெலியா நகரில் டெங்கு நுளம்புகள் பெருகுவதை தடுக்க மஸ்கெலியா பிரதேச சபையினால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு மஸ்கெலியா பிரதேச சபையின்...

Load More
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி