மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜித் பவார் பயணித்த விமானம் விபத்துக்குள்ளான நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மும்பையிலிருந்து புறப்பட்ட அஜித் பவார் பயணித்த விமானம், இன்று காலை 8:45 மணியளவில் பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறக்க முயன்றபோது, விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் மோதி விபத்துக்குள்ளானது.விபத்தைத் தொடர்ந்து விமானம் தீப்பிடித்து எரிந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விமானத்தில் அஜித் பவார் உட்பட விமானிகள் மற்றும் உதவியாளர்கள் என நால்வர் இருந்துள்ளனர்.இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அஜித் பவார் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்ததை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உறுதி செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், அஜித் பவாரின் உடல்நிலை குறித்து அவரது அலுவலகமோ அல்லது மாநில அரசோ இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை.










