• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 30, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

வவுனியா மாநகர சபை வழங்கிய கடைத் தொகுதிக்குள் பாரபட்சம்; வர்த்தகர்கள் விசனம்..!

admin by admin
August 13, 2025
in இலங்கை செய்திகள்., வவுனியா செய்திகள்
0
வவுனியா மாநகர சபை வழங்கிய கடைத் தொகுதிக்குள் பாரபட்சம்; வர்த்தகர்கள் விசனம்..!
Share on FacebookShare on Twitter

வவுனியா மாநகர சபையால் நடைபாதை வியாபார நிலையங்கள் அகற்றப்பட்டு புதிதாக அவர்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் பிரமாண்டமாக எழுந்த கடையால் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக வியாபாரிகள் மற்றும் சபை உறுப்பினர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாநகர சபையானது வீதிப் போக்குவரத்துக்கு தடையாக இருந்த இலுப்பையடிப் பகுதி உள்ளிட்ட நகரப் பகுதியில் இருந்த நடைபாதை வியாபார நிலையங்களை அப்புறப்படுத்தியதுடன், குறித்த வியாபாரிகளுக்கு வவுனியா மாநகர சபை முன்பாகவும், பொலிஸ் நிலையம் முன்பாகவும் 10 இற்கு 8 என்ற அளவுப் பிராமணத்தில் கடைகளை வழங்கியிருந்தது.

இவ்வாறு வழங்கப்பட்ட நிலையில், வவுனியா மாநகர சபை முன்பாக வழங்கப்பட்ட கடைத் தொகுதியில் வவுனியா நகரம் மற்றும் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் நிரந்தர வர்த்தக நிலையத்தை வைத்துள்ளவரும், ஏற்கனவே நடைபாதை வியாபாரத்தை நடாத்தாமல் இருந்தவருமான பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தந்தை, மகள், மருமகன் என மூவருக்கு ஏனைய தமிழ், முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகளுக்குச் செல்லும் பாதையில் கடை வழங்கப்பட்டு அவை மூன்றும் 25 இற்கு 30 என்ற அளவில் ஒரு பெரும் கடையாக நிலையான கற்கள், சீமெந்து, கம்பி என்பவற்றைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.

ஆனால், ஏனைய வர்த்தகர்கள் வெறும் நிலத்தில் தகரம் போட்டு வர்ததக நிலையங்களை அமைத்து வருகின்றனர். முறையற்ற விதத்தில் அமைக்கப்பட்ட குறித்த பெரும்பான்மை இனத்தவரின் வர்த்தக நிலையத்தை அகற்ற மாநகர சபை உத்தியோகத்தர்கள், சபை உறுப்பினர்கள் நடவடிக்கையை எடுத்து குறித்த வியாபார நிலையம் அமைக்கப்பட்டபோது தடுத்து நிறுத்தப்பட்டு அவை அகற்றப்பட்டன.

இருப்பினும், மறுநாள் குறித்த வியாபார நிலையத்தின் கட்டுமாணப் பணிகள் சில உறுப்பினர்கள், மாநகர சபை பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்கள் ஆகியோரின் எதிர்ப்பையும் மீறி இடம்பெற்று அது தற்போது முழுமை பெற்றுள்ளது. ஏனைய தமிழ், முஸ்லிம் வர்த்தகர்களுக்கு ஒரு நிலைப்பாடும், பெரும்பான்மையின செல்வாக்கு மிக்க வர்த்தகருக்கு ஒரு நிலைப்பாடும் எடுக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறித்த கட்டுமாணம் தொடர்பில் உத்தியோகத்தர்கள் குறித்த வியாபாரியிடம் கேட்டபோது, இரவு 11 மணியளவில் பொலிஸார் தடுத்து நிறுத்தி குறித்த கட்டுமாணம் நிறுத்தப்பட்டாலும் இரவு 1 மணிக்கு அனுமதி பெறப்பட்டு மறுநாள் கட்டியதாக தெரிவித்துள்ளனர். குறித்த நடவடிக்கை தொடர்பில் சபையில் பல உறுப்பினர்களும், மாநகர சபை உத்தியோகத்தர்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.

Related Posts

சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலிகளைக் கொள்ளையிட்ட நபர் சிக்கினார்.!

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

by Mathavi
May 30, 2026
0

மஹபாகே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொடுபல வீதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (29) வலான மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப்படை அதிகாரிகள் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டபோது பெருமளவிலான சட்டவிரோத...

கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு.!

கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 30, 2026
0

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில், வவுனியா ஈரற்பெரியகுளம் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது...

புதிய அரசமைப்பு நிச்சயம் உருவாகும்.!

புதிய அரசமைப்பு நிச்சயம் உருவாகும்.!

by Mathavi
May 30, 2026
0

"நாட்டுக்கு உகந்த புதிய அரசமைப்பு ஒன்று நிச்சயம் உருவாக்கப்படும். எனினும், அதற்கான காலவரைவு குறித்து இதுவரை அமைச்சரவையில் எவ்வித இறுதித் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. அதேநேரம், வடக்கு, கிழக்கு...

யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியாவின் மூத்த சுவாமி சுத்தானந்தகிரி இலங்கை விஜயம்.!

யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியாவின் மூத்த சுவாமி சுத்தானந்தகிரி இலங்கை விஜயம்.!

by Mathavi
May 30, 2026
0

உலகப் புகழ்பெற்ற ஆன்மிக நூலான ஒரு யோகியின் சுயசரிதம் நூலின் ஆசிரியர் சுவாமி பரமஹம்ச யோகானந்தர் 1917 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப்...

வடமராட்சி கடற்பரப்பில் காணாமல் போன மீனவர்களைத் தேட உலங்கு வானூர்தி அனுப்பப்படும்.!

வடமராட்சி கடற்பரப்பில் காணாமல் போன மீனவர்களைத் தேட உலங்கு வானூர்தி அனுப்பப்படும்.!

by Mathavi
May 30, 2026
0

யாழ். வடமராட்சி கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன நான்கு மீனவர்களையும் தேடும் பணிகளை விரைவுபடுத்துவதற்காக, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன்,...

டிக்கோயா இரட்டைக் கொ*லையுடன் சம்மந்தப்பட்ட சந்தேக நபர் மீண்டும் கைது செய்யப்படவில்லை!

பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

by selvan
May 29, 2026
0

நுவரெலியா மாவட்ட பிராந்திய ஊடகவியலாளரின் சேவைக்கு இடையூறு விளைவித்த ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றுகின்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது....

மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின்  தேர்த்திருவிழா இன்று இடம்பெற்றது.

மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று இடம்பெற்றது.

by selvan
May 29, 2026
0

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த வியாழக்கிழமை (21) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (29)...

நுவரெலியாவில் இடம்பெற்ற வெடி விபத்தில் பெண் ஒருவர் படுகாயம்!

நுவரெலியாவில் இடம்பெற்ற வெடி விபத்தில் பெண் ஒருவர் படுகாயம்!

by selvan
May 29, 2026
0

நுவரெலியாவின் இராகலை மஹகுடுகலை, அப்பிள் பாம் பிரதேசத்தில், இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்தவர், ஹைபொரஸ்ட் இல.01-ஐச் சேர்ந்த மகாலிங்கம் சித்திராதேவி எனத் தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்...

சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு உதவி செய்த மக்களுக்கு சிவாஜிலிங்கம் உருக்கமான நன்றி!

சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு உதவி செய்த மக்களுக்கு சிவாஜிலிங்கம் உருக்கமான நன்றி!

by selvan
May 29, 2026
0

தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், மருத்துவச் சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தமிழ் மக்களுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தனது...

மொனராகலையில் பேருந்து விபத்து – 26 பேர் படுகாயம்!

மொனராகலையில் பேருந்து விபத்து – 26 பேர் படுகாயம்!

by selvan
May 29, 2026
0

மொனராகலை - சியம்பலாண்டுவ பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி