• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, May 28, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

சிங்கள மக்கள் வாழாத பகுதிகளில் விகாரைகளை அமைக்கும் பணிகள் முன்னெடுப்பு.!

Mathavi by Mathavi
April 26, 2025
in இலங்கை செய்திகள், தேர்தல் களம், மட்டக்களப்பு செய்திகள்
0 0
0
சிங்கள மக்கள் வாழாத பகுதிகளில் விகாரைகளை அமைக்கும் பணிகள் முன்னெடுப்பு.!
Share on FacebookShare on Twitter

இந்த ஆட்சிக் காலத்திலும் திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள மக்கள் வாழாத பகுதிகளில் 44 விகாரைகளை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாணக்கியன் தெரிவித்தார்.

உள்ளுராட்சிமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நான்காம் வட்டாரத்தில் போட்டியிடும் ஆரியரட்ன அவர்களை ஆதரிக்கும் பொதுக்கூட்டம் நேற்று(25) மாலை சின்ன ஊறணியில் நடைபெற்றது.

நான்காம் வட்டார வேட்பாளர் ஆரியரட்ன தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், இ.சிறிநாத், ஞா.சிறிநேசன், முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் மாநகரசபை உறுப்பினரும் வேட்பாளருமான ரகுநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

இந்த பொதுக்கூட்டத்தில் பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டதுடன் வேட்பாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரைகளும் நடைபெற்றன.

இதன்போது கருத்து தெரிவித்த சாணக்கியன் எம்.பி.,

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் என்று சொல்லப்படும் விடயங்களை திரிவுபடுத்தி இந்த நாட்டில் தமிழரசுக்கட்சியின் பிரச்சினை வேறு தமிழ் மக்களின் பிர்சினை வேறு என்ற வகையிலான நகர்த்தல்களை இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் அனுரகுமாரவுடன் இருந்தபோது மட்டக்களப்பு மாவட்டம் மட்டும் இலங்கை தமிழரசுக் கட்சியுடன் இருந்தது என்பது அனைவரும் அறிந்த விடயம். ஆனால் வடக்கு கிழக்கிலே இருக்கின்ற எட்டு மாவட்டங்களிலே மட்டக்களப்பு மாவட்டத்தை தவிர்த்து ஏனைய ஏழு மாவட்டங்களில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்காகவே அரசியலில் ஈடுபடுகின்ற தமிழினத்திற்கு எதிராக கடந்த காலங்களில் செயற்பட்ட பேரினவாத அரசாங்கக் கட்சி வெற்றி பெற்றிருக்கின்றது என்பது தமிழ் மக்களுக்கு ஒரு ஆபத்தான நிலைமையை உருவாக்கியிருக்கின்றது.

இந்த நாட்டிலே இருக்கின்ற தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் என்னென்ன என்பது பற்றி தேசிய மக்கள் சக்தியினுடைய ஜனாதிபதியும் அந்த அரசாங்கத்தினுடைய அமைச்சர்களும் புதிதாக விளக்கங்களை அளித்து வருகின்றார்கள். இந்த நாட்டின் தமிழ் மக்களுடைய பிரச்சினை சோறும் நீரும் மாத்திரம் தான் என்று இந்த அரசாங்கத்தினர் மறைமுகமாக சொல்லி வருகின்றனர்.

இந்த மாவட்டத்தினுடைய அபிவிருத்திக் குழுத் தலைவராக அயல் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற ஒரு பிரதியமைச்சர் ஒரு வட்டாரத்தின் பெயரைக் குறிப்பிட்டு இந்த வட்டாரத்திலே இருக்கின்ற மக்கள் தேசிய சக்திக்கு வாக்களிக்க வேண்டும் ஏனென்றால் ஜனாதிபதி பயன்படுத்தும் எரிபொருளினுடைய அளவை 2500 லீற்றராக குறைத்திருக்கின்றார், அந்தக் காரணத்தினால் இந்த வட்டாரத்தினுடைய மக்கள் தேசிய சக்திக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றார்.

உங்களுடைய ஜனாதிபதி எரிபொருள் பாவனையை குறைத்திருப்பது எங்கள் பிரச்சினையல்ல. எரிபொருள் பாவனையைக் குறைத்து நாட்டிலே நிதியை மீதப்படுத்துவது வரவேற்கத்தக்க விடயம். ஆனால் மீதப்படுத்துகின்ற அந்த நிதியை பயன்படுத்தி வடக்கு கிழக்கிலே ஏதும் செய்கின்றார்களா என்பதையே நாங்கள் பார்க்க வேண்டும்.

எழுபத்தைந்து ஆண்டுகளுக்கும் அதிகமாக பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரம் கிடைத்த காலத்திலிருந்து இந்த நாட்டிலே தமிழர்களுக்கு சமவுரிமை இல்லை, இந்த நாட்டிலே தமிழர்களுக்கு நிரந்தரமானதொரு அரசியற் தீர்வு வேண்டும், அந்த அரசியல் தீர்வினூடாக இந்த நாட்டிலே தமிழ் மக்களும் சம அந்தஸ்துடன் வாழவேண்டும், எங்கள் நிலங்களை நாங்களே ஆளவேண்டும், எங்கள் பிரதேசத்தினுடைய எதிர்காலத்தை நாங்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்று எத்தனையோ தசாப்த காலமாக நாங்கள் சொல்லிவருகின்றோம்.

இருபது, முப்பது வருடங்களாக அதனை அரசியல் ரீதியாக சொல்லி வந்தோம். அது பயனளிக்காத காரணத்தினால் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடினார்கள். முப்பது வருடங்களாக போராட்டம் நடந்தது. போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் நாங்கள் அரசியல் ரீதியாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதன் நோக்கம் நிரந்தரமானதொரு அரசியல் தீர்வு தமிழ் மக்களுக்கு வழங்கினால் மாத்திரம்தான் தமிழ் மக்களுக்கு சிறந்த ஒரு எதிர்காலத்தை அமைக்கலாம்.

ஜனாதிபதி எரிபொருளை குறைவாக பயன்படுத்துகின்றார் என்பதற்காக தமிழ் மக்களுக்கு சிறந்த ஒரு எதிர்காலம் கிடைக்கும் என்று கூறமுடியாது.

Thinakaran
410 721.7K
  • Videos
  • Playlists
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! Today
  • போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!
    போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.! Today
  • தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.!
    தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.! 1 day ago
  • 397 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரின் சொத்துக்கள் முடக்கம்..!

      போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரின் சொத்துக்கள் முடக்கம்..!

      by Thamil
      May 28, 2025
      0

      போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு பணம் சம்பாதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர் ஒருவரின் பத்து கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முடக்கியுள்ளனர். எம்பிலிட்டிய ஜயசிங்க...

      மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு..!

      மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு..!

      by Thamil
      May 28, 2025
      0

      மட்டக்களப்பு - திக்கோடை சந்தி அருகாமையில் உள்ள வீதியின் மதகு ஒன்றின் அருகில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது இன்று (28)இடம்பெற்றுள்ளதாக...

      நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த இரு போதைப்பொருள் வர்த்தகர்கள் ஐஸ் போதைப்பொருளுடன் கைது..!

      நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த இரு போதைப்பொருள் வர்த்தகர்கள் ஐஸ் போதைப்பொருளுடன் கைது..!

      by Thamil
      May 28, 2025
      0

      2788 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த இரண்டு போதைப்பொருள் வர்த்தகர்கள் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு...

      இலவச விஞ்ஞான பாடத்திட்டம் தொடர்பான நிகழ்வு..!

      இலவச விஞ்ஞான பாடத்திட்டம் தொடர்பான நிகழ்வு..!

      by Thamil
      May 28, 2025
      0

      திஹாறிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் ESDS மூலம் வெற்றிகரமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட, முற்றிலும் இலவச விஞ்ஞான பாடத்திட்டம் தொடர்பான நிகழ்வு இன்று இடம்பெற்றது. திஹாறிய அல்...

      நீர்கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம்..!

      நீர்கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம்..!

      by Thamil
      May 28, 2025
      0

      நீர்கொழும்பு - தலாதுவ பகுதியில் இன்று (28) துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தனிப்பட்ட தகராறு காரணமாக இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு நபர்களுக்கு...

      தம்பலகாமம் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்ற விற்பனைக் கண்காட்சி..!

      தம்பலகாமம் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்ற விற்பனைக் கண்காட்சி..!

      by Thamil
      May 28, 2025
      0

      சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தல் மற்றும் அவர்களுக்கான சந்தை வாய்பை அதிகரிக்கும் நோக்கில் இன்று (28) புதன்கிழமை தம்பலகாமம் பிரதேச செயலக வளாகத்தில்...

      தமிழரசுக் கட்சியின் மூதூர் பிரதேச சபைத் தவிசாளர் அறிவிப்பு..!

      தமிழரசுக் கட்சியின் மூதூர் பிரதேச சபைத் தவிசாளர் அறிவிப்பு..!

      by Thamil
      May 28, 2025
      0

      இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் மூதூர் பிரதேச சபைத் தலைவர் தெரிவுக்காக இம்முறை நடைபெற்ற முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சம்பூர் வட்டாரத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வரத்தினம்...

      முல்லைத்தீவில் இடம்பெற்ற இந்தியாவின் மனிதாபிமான உதவிகள் வழங்கும் நிகழ்வு..!

      முல்லைத்தீவில் இடம்பெற்ற இந்தியாவின் மனிதாபிமான உதவிகள் வழங்கும் நிகழ்வு..!

      by Thamil
      May 28, 2025
      0

      "எமக்கு உடனடியாக உதவிகளைச் செய்ய மிக வேண்டப்பட்ட நாடாக இந்தியா இருக்கின்றது. வடக்கு மாகாணம் உதவிக்காக இந்தியாவை நம்பியிருக்கின்றது. எங்களுக்கு இதுவரை உதவிகளை வழங்கிய இந்திய மக்களுக்கும்,...

      கட்டைக்காடு சென்மேரிஸ் முன்பள்ளியில் சிறுவர் கண்காட்சி..!

      கட்டைக்காடு சென்மேரிஸ் முன்பள்ளியில் சிறுவர் கண்காட்சி..!

      by Thamil
      May 28, 2025
      0

      யாழ்.வடமராட்சிக் கிழக்கு - கட்டைக்காடு சென்மேரிஸ் முன்பள்ளியில் சிறுவர் கண்காட்சி இன்று(28) இடம்பெற்றது. முன்பள்ளியில் மு.ப 10.00 மணியளவில் அவ் முன்பள்ளியின் ஆசிரியர் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.மங்கள...

      Load More
      Next Post
      கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்குச் சொந்தமான காணிகளை வழங்குமாறு கோரிக்கை.!

      கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்குச் சொந்தமான காணிகளை வழங்குமாறு கோரிக்கை.!

      பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு வத்திக்கான் தூதரகத்தில் பிரதமர் இரங்கல்.!

      பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு வத்திக்கான் தூதரகத்தில் பிரதமர் இரங்கல்.!

      பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு வத்திக்கான் தூதரகத்தில் நாமல் இரங்கல்..!

      பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு வத்திக்கான் தூதரகத்தில் நாமல் இரங்கல்..!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி