• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, May 28, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

கிறீன் லேயர் அமைப்பின் ஏற்பாட்டில் பத்தாயிரம் நெல்லிக் கன்றுகள் நடுகை

Sangeetha by Sangeetha
April 16, 2025
in இலங்கை செய்திகள், யாழ் செய்திகள்
0 0
0
கிறீன் லேயர் அமைப்பின் ஏற்பாட்டில் பத்தாயிரம் நெல்லிக் கன்றுகள்  நடுகை
Share on FacebookShare on Twitter

மரம் இல்லாவிட்டால் மனிதன் வாழ முடியாது. ஆனால் மனிதன் இல்லாவிட்டால் மரங்கள் சிறப்பாக வாழும். மரம் நடுகையின் அவசியத்தை தற்போதைய காலநிலை எமக்கு உணர்த்தியிருக்கின்றது. இதை தன்னார்வமாக முன்னெடுக்கம் கிறீன் லேயர் சுற்றுச்சூழல் அமைப்புக்கு எமது மாகாண மக்கள் சார்பில் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். 

கிறீன் லேயர் அமைப்பின் ஏற்பாட்டில் பத்தாயிரம் நெல்லிக் கன்றுகளை நடுகை செய்யும் செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு கோப்பாய் பிரதேச செயலகத்தில் இன்று புதன் கிழமை (16.04.2025) இடம்பெற்றது. 

நிகழ்வில் தலைமையுரையாற்றிய பிரதேச செயலர் ச.சிவஸ்ரீ, அரசாங்கத்தின் தூய்மையான இலங்கை செயற்றிட்டத்தின் முக்கிய அங்கத்தினுள் ஒன்றாக மரம் நடுகையும் இருக்கின்றது. கடந்த காலங்களில் எமது பிரதேசத்தில் மரங்கள் அழிக்கப்பட்டளவுக்கு அவை நடுகை செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டார். 

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து கிறீன் லேயர் அமைப்பின் நிறுவுனர் பா.சசிக்குமார் தனது உரையில், எமது பிரதேசத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுகை செய்யும் தனது இலக்கை கடந்த ஆண்டு அடைந்துள்ளதாகவும், தற்போது 10 லட்சம் மரக்கன்றுகளை நடுகை செய்யும் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் நெல்லி மருத்துவக் குணம் உடையது மாத்திரமல்லாது பொருளாதார ரீதியில் வருமானத்தை ஈட்டித்தரும் என்பதையும் சுட்டிக்காட்டினார். உப்புநீரை நன்னீராக்கக் கூடிய தன்மையும் நெல்லி மரத்துக்கு உள்ளது எனத் தெரிவித்த அவர், வீடுகளில் வளர்ப்பதற்கு அது பொருத்தமானது என்பதையும் குறிப்பிட்டார். சருமங்கள் சுருங்குவதால் ஏற்படும் பாதிப்புக்கு நெல்லி மிகச் சிறந்த மருந்து என்பதால் வெளிநாடுகளில் இதன் பெறுமதி அதிகம் என்று சுட்டிக்காட்டியதுடன், நீரிழிவுக்கும் இது சிறந்ததொன்று குறிப்பிட்டார். 

பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் தனது உரையில், மரங்கள் செழிப்பாக இருக்கின்றமை வளமான நாட்டுக்கான அடையாளம். எமது மாகாணத்தில் கடந்த பல வருடங்களாக மரங்கள் பல தரப்புக்களாலும் நடுகை செய்யப்பட்டாலும் அவை உரிய பராமரிப்பு இல்லாமலும் வேறு பல காரணங்களாலும் உயிர்தப்பவில்லை. ஆனால் அண்மைக்காலமாக அப்படியில்லாமல் மரம் நடுகையுடன் நின்றுவிடாமல் அதனைப் பராமரிப்பதிலும் கவனம் செலுத்துகின்றனர். 

கிறீன் லேயர் அமைப்பின் சசிக்குமார் ஆரம்பத்தில் தனியொருவனாகவே மரம் நடுகையை முன்னெடுத்திருந்தார். இன்று அவர் தனது இலக்கை விரிவுபடுத்தி இந்தச் செயற்றிட்டத்தில் பலரையும் உள்ளீர்த்திருக்கின்றார். எமது தேசத்தை வளமாக்க அவர் எடுக்கும் முயற்சிகளுக்கு பாராட்டுகின்றேன். அதேபோல பிரதேச செயலர் சிவஸ்ரீயும் தெல்லிப்பழையில் பிரதேச செயலராகக் கடமையாற்றிய காலத்தில், மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி என்பனவற்றை சிறப்பாக முன்னெடுத்தவர். அப்படிப்பட்ட ஒருவர் இருக்கின்ற பிரதேச செயலர் பிரிவில் மரம் நடுகையை முன்னெடுத்துள்ளீர்கள். அதுவும் சிறப்பாக வெற்றியளிக்கும். 

இப்போது ஒவ்வொரு தாழமுக்கத்தை தொடர்ந்தும் எமது மாகாணத்தின் வளி மாசடைகின்றது. அயல் நாடுகளிலிருந்து வரும் காற்றால் இந்த நிலைமை ஏற்படுகின்றது. எதிர்காலத்தில் இந்த நிலைமைகளை ஓரளவுக்கேனும் தணிப்பதற்கு நாம் இப்போதே மரங்களை நடுகை செய்யவேண்டும், என்று ஆளுநர் வலியுறுத்தினார்.

ஆளுநரால் பயனாளிகளுக்கு நெல்லி மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், கோப்பாய் பிரதேச செயலக வளாகத்தில் நெல்லி மரக்கன்றையும் ஆளுநர் நடுகை செய்தார்

Thinakaran
408 720.9K
  • Videos
  • Playlists
  • தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.!
    தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.! 1 day ago
  • தமிழ் மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என்றவர்கள் ஓட பாதை தெரியாமல் குடும்பிச்சண்டையில் ஈடுபட்டுள்ளனர்
    தமிழ் மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என்றவர்கள் ஓட பாதை தெரியாமல் குடும்பிச்சண்டையில் ஈடுபட்டுள்ளனர் 1 day ago
  • நுவரெலியாவில் மீண்டும் பேருந்து விபத்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
    நுவரெலியாவில் மீண்டும் பேருந்து விபத்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி! 4 days ago
  • 395 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Sangeetha

      Sangeetha

      Related Posts

      துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது..!

      துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது..!

      by Thamil
      May 27, 2025
      0

      தெஹிவளை பொலிஸ் பிரிவின் நெதிமால பகுதியில் கடந்த 19 ஆம் திகதி நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விடயம்...

      சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்த திட்டம்..!

      சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்த திட்டம்..!

      by Thamil
      May 27, 2025
      0

      உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்த கிளீன் ஸ்ரீலங்கா செயலகம், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கடலோரப் பகுதியான நிலாவெளி, புறாமலைத் தீவு மற்றும் திருகோணமலை...

      மன்னாரில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு..!

      மன்னாரில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு..!

      by Thamil
      May 27, 2025
      0

      மன்னார்- பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் காணாமல் போன முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவமானது இன்று (27) இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவத்தில் மன்னார்...

      யாழில் பித்தப்பை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண் ஒருவர் உயிரிழப்பு..!

      யாழில் பித்தப்பை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண் ஒருவர் உயிரிழப்பு..!

      by Thamil
      May 27, 2025
      0

      யாழில், பித்தப்பை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் (27) உயிரிழந்துள்ளார். இவர் நல்லூரைச் சேர்ந்த துஷ்யந்தன் நிரோஷா (வயது 37)...

      யாழில் போதைக்கு அடிமையான பெண்ணுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு..!

      யாழில் போதைக்கு அடிமையான பெண்ணுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு..!

      by Thamil
      May 27, 2025
      0

      சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுன்னாகம் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான 26 வயதுடைய பெண்ணொருவர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் நேற்றைய...

      ஆனையிறவு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்..!

      ஆனையிறவு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்..!

      by Thamil
      May 27, 2025
      0

      ஆனையிறவு உப்பளத்தில் கடந்த 13.05.2025 ஆம் திகதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டமானது இன்றைய தினம் (27) உப்பு உற்பத்தி நிறுவனத்தின் முகாமையாளர் எம் .ஜே. பி. துவான்...

      தமிழர்கள் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக அழுத்தம் வழங்க வேண்டும் – சிறீதரன் கோரிக்கை..!

      தமிழர்கள் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக அழுத்தம் வழங்க வேண்டும் – சிறீதரன் கோரிக்கை..!

      by Thamil
      May 27, 2025
      0

      "ஆட்சி மாற்றத்தின் பின்னும் இந்த நாட்டில் திட்டமிட்ட வகையில் நடைபெற்றுவரும் இன, மத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக சர்வதேச அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டியுள்ளதன் அவசியம் உணர்ந்து, ஆஸ்திரேலிய அரசின்...

      தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்க ஏதுவான சாதகநிலை – ஜெகதீஸ்வரன் தெரிவிப்பு..!

      தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்க ஏதுவான சாதகநிலை – ஜெகதீஸ்வரன் தெரிவிப்பு..!

      by Thamil
      May 27, 2025
      0

      "வவுனியா மாநகரசபை உட்பட வன்னியின் சில சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதற்கான சாதக நிலைமை உள்ளதாக" தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

      போக்குவரத்து நெரிசலுக்குள்ளான கொழும்பு..!

      போக்குவரத்து நெரிசலுக்குள்ளான கொழும்பு..!

      by Thamil
      May 27, 2025
      0

      கொழும்பு - கோட்டை, லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ள நிலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டதால்...

      Load More
      Next Post
      சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட உலர்ந்த மஞ்சளுடன் சிக்கிய சந்தேக நபர்கள்.!

      சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட உலர்ந்த மஞ்சளுடன் சிக்கிய சந்தேக நபர்கள்.!

      தந்தை, மகன் கொ லை; சகோதரர்கள் இருவர் கைது.!

      தந்தை, மகன் கொ லை; சகோதரர்கள் இருவர் கைது.!

      இனந்தெரியாத நபர்களால் குடும்பஸ்தர் கொ லை.!

      தனிப்பட்ட தகராறு காரணமாக இளம் குடும்பஸ்தர் கொ லை!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி