கிளிநொச்சி நீதிமன்ற முன் வீதியானது எந்தவித பராமரிப்பும் இல்லாமல் காணப்படுகின்றது குறித்த விதியானது அதிகளவான கழிவுகள் மற்றும் மிருக எச்சங்கள் பிளாஸ்டிக் பொருட்கள் ஆங்காங்கே குவிக்கப்பட்ட நிலையில் உள்ளது
நீதிமன்றத்திற்கு வரும் நபர்கள் குறித்த வீதியினை பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர் இவ்வாறு எந்தவித பராமரிப்பும் இல்லாமல் தொடர்ந்து குறுகிய காலத்தில் மிகப்பெரிய குப்பைமேடாக மாறிவிடும் என அப்பிரதே ச மக்கள் தமது ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர்
இவ்விதியானது கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட வீதி என தெரிய வருகின்றது குறிப்பிட்ட பல காலமாக எந்தவித துப்புரவு பணியும் மேற்கொள்ளவில்லை என இவ்விடத்து மக்கள் தமது கவலையினை தெரிவிக்கின்றனர்
குறித்த வீதியில் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் தமது பயணத்தினை மேற்கொள்ள நினைவாக உள்ளதென கூறுகின்றனர்